கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Saturday, October 4, 2008

அறிமுகம்

வாழ்க்கை நீரோட்டத்தில் தட்டு தடுமாறி வழிகாட்ட யாருமின்றி! சென்ற பாதை ஒன்று, செல்ல நினைத்த பாதை ஒன்று,செல்கின்ற பாதை ஒன்றாக காலத்தை வென்றிட துடிக்கும் ஒருவன்!!!!!

எழுதி வைக்கப்படாத எந்த காவியமும் நிலைப்பதில்லை என்பார்கள், அதற்காக மட்டுமே எழுதவில்லை.மனதில் ஏற்ப்படுகின்ற எண்ணங்களையும் ஏமாற்றங்களையும், கவ்லைகளையும் கண்ணீரையும், இவற்றுக்கு மேலாக அனுபவித்த சுவாரஸ்யமான விடயங்களையும், கண்ப்பார்த்தவைகளையும், காதில் கேட்டவைகளையும் நான் இரசித்தவைகளையும் நாளுப்பேருடன் பகிர்ந்து கொள்ளவேனும்கிற ஆசைதானுங்க இந்த வலைப்பதிவு.

தனக்கு கிடைக்கின்ற காற்றை தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் இனிமையான இசையாய் வெளிப்படுத்தி எல்லோரையும் மகிழ்விக்கும் புல்லாங்குழாய் இருக்க ஆசை.பார்க்கலாம் இந்த ஆசை எவ்வளவு நாளுக்கு நீடிக்குதுனு!!!!!!

அன்புடன்,
சானா.கலைகுமார்
இராகலை

No comments:

.