கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Friday, November 7, 2008

இலங்கையின் செங்கோல்


இதுதான் இலங்கை பாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல்.நேர்த்திமிக்க அலங்கரிப்பும் புரதான வணக்கத்தலங்களின் வடிவமைப்பையும்,அலங்காரத்தினையும் கொண்டதாக இது காணப்படுகிறது.
அத்துடன் பாராளுமன்ற ஆட்சியின் விழுமியங்களையும்,தத்துவ கோட்பாடுகளையும் குறிக்கும் நித்தியதன்மை,அழகு,பரிபூரண
சமாதானம்,நிரந்தரத் தன்மை,வளர்ச்சி, செழுமை,தூய்மை என்பவற்றின், அடையாளமாக இது திகழ்கிறது. செங்கோலானது பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அதிகாரச்சின்னமாகவும் திகழ்வதால் பாராளுமன்றம் கூடும் போது செங்கோல் வைக்கப்படுவது அவசியமாகும்.

இப்படிப்பட்ட செங்கோலை ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் அதனை தூக்கிக் கொண்டு சபையைவிட்டு ஓடினார்,ஓடிய அவர் அதனை எங்கோ ஒளித்து விட்டு பின்னர் பிற்பகலில் அது மீட்கப்பட்டது , என்பதலாம் வேறுவிடயம். சரி நாம் விசயதுக்கு வருவோம்.
செங்கோல் 1949 ம் ஆண்டு பிரித்தானியப் பொதுச்சபையினால் இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது 28 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ளதோடு 48 அங்குல நீளமுடையது. இச் செங்கோல், கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டு, வெள்ளி, 18 கரட் தங்கம், நீலமாணிக்கக்கற்கள் என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் சபாமண்டபத்திற்கு வருகை தரும் போதும், வெளியேறும் போதும், அவருக்கு முன்னே, படைக்கலச்சேவிதர் செங்கோலை ஏந்தியபடி செல்ல, அவரைத் தொடர்ந்து பாராளுமன்றச் செயலாளர் நாயகமும், பிரதிச் செயலாளர் நாயகமும் உதவிச் செயலாளர் நாயகமும் செல்வர்.

பாராளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கான மேசைக்குக் கீழே, அதற்கென அமைக்கப்பட்டுள்ள தாங்கியில் செங்கோல் காணப்படும்.
செங்கோல் மட்டுமே இருக்கும், ஆனால் செங்கோல் ஆட்சி.......???.....

No comments:

.