கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Saturday, November 29, 2008

விசித்திர உலகம்

நான் பாவங்களை கழுவ‌
நீர் கொடுக்கின்றேன்.
நீங்களோ!
சாக்கடை என்கிறீர்கள்.

அவர்கள் குடிக்கச்
சாக்கடை நீர் த்ருகின்றார்கள்.
நீங்களோ!
தேவாமிர்தம் என்கிறீர்கள்.

நான் அநீதிக்கு கோபம் கொண்டு
உங்களைத் தூண்டுகிறேன்.
நீங்களோ!
அராஜகம் என்கிறீர்கள்.

அவர்கள் அநீதியை ஆதரித்து
பலர் கால்களைப் பிடிக்கின்றார்கள்.
நீங்களோ!
அகிம்சை என்கிறீர்கள்.

இது விசித்திர உலகம்!
நீயாங்களுக்குத் தண்டனையும்,
அநீயாயங்களுக்கு
பதவியும் கொடுக்கின்றது.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

No comments:

.