கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Thursday, November 13, 2008

சிறகுகள்

அசைய மறுத்தால்
சிறகுகள் இல்லை!
இசைய மறுத்தால்
மாற்றம் இல்லை!
வளர மறுத்தால்
உயர்ச்சி இல்லை!
முட்டையை உடைக்க‌
மறுத்தால்
குஞ்சுகள் இல்லை.
முக்காடுகளின் முணுமுணுப்பு
இனியேனும் முடியட்டும்.
உங்கள் சிந்தனை பட்டே
சிறைக்கம்பிகள் உடையட்டும்
பொழுது இனி உங்களுக்கும்
சேர்ந்தே விடியட்டும்.
உங்கள் சிறகுகள்
கிழக்கு நோக்கியே விரியட்டும்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

1 comment:

Anonymous said...

///////////உங்கள் சிந்தனை பட்டே
சிறைக்கம்பிகள் உடையட்டும்/////////

nice:));

.