கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Friday, December 19, 2008

பாழான நாள்

ரணமாய் வலிக்குது உடம்பு,
தறிக்கெட்டு ஓடுது மனது,
ஏன் எனக் கேட்டது அறிவு,
விதி என்று சொல்லுது உறவு.

இரத்தத்தில் சிவக்குது பூமி,
சித்தத்தில் கலங்குது உறுதி,
மொத்தத்தில் எழுகிறது இறுதி.

ஆள் ஒன்றுசேர்கின்றனர் தானாய்,
தாள் பற்றி உழைக்கின்றனர் மாடாய்,
மீள் எழ நினைக்கின்றனர் மேலாய்,
நாள் ஒன்று கரையுது பாழாய்.


திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.

No comments:

.