கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, January 28, 2009

கட்டபொம்மன்

தூக்குக் கயிற்றை
நீ வீரத்தோடு முத்தமிட்டாய்
தூக்குக் கயிறே
துக்கக் கயிறானது அன்றுதான்!!

தன் மயிருக்காக‌
பிச்சையேந்தி பலர் நின்றபோது
தன் உயிருக்காகக் கூட‌
அடங்கிபோகாத வீரன் நீ!

உன் குரலில் ஒலித்த ஒலி
உன் சுவாசக்காற்றல்ல
மக்களின் மூச்சுக்காற்று!

வெள்ளைக் கழுகளுக்கு
சேவகம் செய்த‌
நரிகளுக்கு மத்தியில்
வீரத்தோடு கர்ஜித்தவனே!

அது எப்படி முடிந்தது உன்னால்?
எல்லோருக்குமாக சுவாசிக்க,
எல்லோருக்குமாகவும் இறக்க,
இறந்தும் இறவாமல் இருக்க!

எல்லோருக்குமாக சுவாசித்தவன் நீ
எல்லோரும் சுவாசித்தார்கள் உன்னை.

தோள் பிடித்து, கால் பிடித்து,
சிம்மாசனக் கால்களுக்குக் கீழ்
எலும்புதுண்டுகளையாய்
காத்து கிடந்த எட்டயப்பர்கள்
உன்னை பார்த்துக் குரைத்தபோது
உன் வீரத்தால் அவர்களை முறைத்தாய்.

தூக்குக் கயிற்றில் தொங்கியது
உன் தலையல்ல.
ஒரு சமூகத்தின் விலை!
எங்களுக்கு விட்டுசென்ற‌
புரட்சி எனும் கலை!!!!

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

No comments:

.