கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Thursday, March 26, 2009

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... (இலங்கை)

இன்று வீரகேசரி பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் உள்ள ஒரு படத்தை பார்த்த‌துமே நம்பவே முடியலங்க! ஷாக்காயிட்டேன்!

உலக நாடுகளோடு இலங்கையிலும் யுத்ததில் பாதிக்கப்பட்ட நமது சகோதரர்களுக்கு நிவாரண பொருட்களும் நிதிவுதவிகளும் சேகரித்து கொண்டிருக்கையில் மியன்மாரில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 22 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இலங்கை வழங்கிவுள்ளது, என புகைப்படத்துடன் ஒரு செய்தி. “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என நினைத்திருப்பார்களே! ம்ம்ம்


சரி சந்தோசப்பட்டுக்கொண்டு பக்கங்களை திருப்பினா இடையில் சில புகைபடங்களுடன் ஒரு செய்தி. படங்கள் கீழே. படத்தின் மேல் சொடுக்கி கொஞ்ச‌ம் வாசித்து பாருங்களேன்.!!


நன்றி வீரகேசரி
http://www.virakesari.lk/VIRA/homeslide.asp



20 comments:

தாமிரபரணி said...

தமிழன் என்றாலே அடிமை என்றாகிவிட்டது, இந்தியாவில் தனக்கு சொந்தமான இடத்திலேயே இந்திகாரனுக்கு அடிமையாக வாழ்கிறான், இலங்கையிலும் இதுபோலதான் அடிமையாக இருங்கள் இல்லை செத்துமடியுங்கள் என்கிறான்
விரக்தியில் அடுத்த பிறவியில் தமிழனாய் பிறக்ககூடாது என்றுகூட சிலபேர் சொல்லலாம், ஆனால் அப்படி எல்லாம் சொல்லலாமல் நாம் இருக்கும்போதே தமிழனை தலைநமிர்ந்து நடக்க வைப்போம், நாம் தமிழன் என்று முதலில் பெருமைபட்டுகொள்ள வேண்டும் பெருமையோடு மட்டும் இல்லாமல் தமிழை நம்மோடு இனைத்துகொள்ளவேண்டும்
வாழ்க தமிழ், வள்க தமிழ்

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

நம்ம முதியவங்க சோல்லுற ஒரு பழ மொழி ஜபகத்துக்கு வருகிறதுகலை ... தண்ணிய விட்டு எண்ணைய எடுக்கிற என்று சொல்வாங்களே அதுதான் இப்ப நம்ம நாட்டுல [நம்ம நாடு என்றுஎன்னை தப்பா சொல்லிட்டனோ....] நடக்குது....

"என்னதான் நடப்பது நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே....."

தர்ஷன் said...

விடுங்க கலை
இதெல்லாம் சகஜமாப் போச்சு
என்னைக் கேட்டால் நமது விடிவை நாம்தான் தேடிக் கொள்ள வேண்டும்.
ஆமாம் நம் தலைவர்மார் எங்கே என யோசித்தேன் ஏதாவது செய்து வோட்டெடுக்க இது பதுளையோ நுவரெலியவோ இல்லையே அதான்

தமிழ் மதுரம் said...

கலை...தன் வீடு எரிகையில் அணைக்க முடியாதவன் எரியும் பக்கத்து வீட்டினை அணைக்கத் தண்ணி ஊற்றினானாம்.???



என்ன உலகம் இது?? இப்பிடியெல்லாம் காதிலை பூச்சுத்தலாமோ??? எம்மாம் பெரிய ஆட்கள் நம்ம அரசியல் வாதிகள்??

ஹேமா said...

கலை,கேடுகெட்ட நாட்டில ஏண்டா பிறந்தோம் எண்டு கிடக்கு.சீ...சீ தூ...தூ...எண்டு எங்களுக்கு நாங்களே மூஞ்சில காறித் துப்பிக் கொள்ளுவம்.வேற என்ன செய்ய முடியும் எங்களால்.

நாட்டில சனம் ஒரு சொட்டுத் தண்ணிக்கு,ஒற்றை பருக்கைச் சோத்துக்குத் தவமாக் கிடக்க...
உதென்ன ஊருக்கு,வெள்ளை வேட்டி கட்டிக் காட்றாங்கள்.உள்ளுக்குள்ள ஊத்தை யாருக்கும் தெரியாது என்கிற நினைப்பாக்கும்...!

Suresh said...

நண்பர் கலை - இராகலை உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வேத்தியன் said...

பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

அகநாழிகை said...

பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.
உங்கள் பதிவுகளை முழுமையாக படித்துவிட்டு பின்னர் வருகிறேன்.

- பொன். வாசுதேவன்

SASee said...

கலை அவர்களே
என்ன சொல்வது.......எங்கள் நிலைமைக்கு.....
நீங்கள் சிங்கள
மொழிச் செய்திகளை பார்ப்பது அல்லது கேட்பதுண்டா..?
விரும்பியோ விரும்பாமலோ என்னால் தினமும் பார்க்க அல்லது கேட்டக கிடைக்கும்.
அதிகமான சிங்கள ஊடகங்களில்
நம்ம தமிழ் செய்திகளுக்கு புறம்பான செய்திகளையே கேட்டகூடியதாக இருக்கு, அதாவது, இந்த சிங்கள தேசத்துக்கு நம்மமேல ஒரு தனி அன்பும் ஆறுதலும் இருப்பது போல,
நம்ம அரசியல் வாதிகள் அந்த காலம் தொடக்கம் இந்த காலம் வரை தம் உள் ஒன்று நினைத்தும் வெளியொன்றுகாட்டுயுமே வருகிறது.
இது தமிழ் மக்களுக்கு புரிந்தது புறாதன காலத்திலே,

தமிழன் தன்மானத்தோடு வாழ்வது எப்போது....?

kuma36 said...

///தாமிரபரணி said...
தமிழன் என்றாலே அடிமை என்றாகிவிட்டது, இந்தியாவில் தனக்கு சொந்தமான இடத்திலேயே இந்திகாரனுக்கு அடிமையாக வாழ்கிறான், இலங்கையிலும் இதுபோலதான் அடிமையாக இருங்கள் இல்லை செத்துமடியுங்கள் என்கிறான்
விரக்தியில் அடுத்த பிறவியில் தமிழனாய் பிறக்ககூடாது என்றுகூட சிலபேர் சொல்லலாம், ஆனால் அப்படி எல்லாம் சொல்லலாமல் நாம் இருக்கும்போதே தமிழனை தலைநமிர்ந்து நடக்க வைப்போம், நாம் தமிழன் என்று முதலில் பெருமைபட்டுகொள்ள வேண்டும் பெருமையோடு மட்டும் இல்லாமல் தமிழை நம்மோடு இனைத்துகொள்ளவேண்டும்
வாழ்க தமிழ், வள்க தமிழ்///

‍‍‍‍‍‍‍‍‍;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

வாங்க தாமிரபரணி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்!

என்ன உங்க வலைக்கு வரமுடியவில்லையே!!

வாழும் தமிழ்!

kuma36 said...

///சந்ரு said...
நம்ம முதியவங்க சோல்லுற ஒரு பழ மொழி ஜபகத்துக்கு வருகிறதுகலை ... தண்ணிய விட்டு எண்ணைய எடுக்கிற என்று சொல்வாங்களே அதுதான் இப்ப நம்ம நாட்டுல [நம்ம நாடு என்றுஎன்னை தப்பா சொல்லிட்டனோ....] நடக்குது....
"என்னதான் நடப்பது நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே....."///

:::::::::::::::::::::::::::::
வாங்க சந்துரு நல்லா பாட்டு பாடுவிங்களே!

kuma36 said...

///தர்ஷன் said...
விடுங்க கலை
இதெல்லாம் சகஜமாப் போச்சு
என்னைக் கேட்டால் நமது விடிவை நாம்தான் தேடிக் கொள்ள வேண்டும்.
ஆமாம் நம் தலைவர்மார் எங்கே என யோசித்தேன் ஏதாவது செய்து வோட்டெடுக்க இது பதுளையோ நுவரெலியவோ இல்லையே அதான்///

:::::::::::::::::::::::::::::::
வாங்க தர்ஷன் எப்படி விடுவது? இப்பதானே ஆரம்பமே!! நமக்கு சகஜம் தான் நாளுபேருக்கு தெரியட்டுமே! ஓகேவா?

kuma36 said...

///கமல் said...
கலை...தன் வீடு எரிகையில் அணைக்க முடியாதவன் எரியும் பக்கத்து வீட்டினை அணைக்கத் தண்ணி ஊற்றினானாம்.???
என்ன உலகம் இது?? இப்பிடியெல்லாம் காதிலை பூச்சுத்தலாமோ??? எம்மாம் பெரிய ஆட்கள் நம்ம அரசியல் வாதிகள்??////

:::::::::::::::::::::::::::::::
வாங்க கமல் காலம் காலமாக இதுதானே நடக்குது
சரியா சொன்னிங்க!!!

kuma36 said...

///ஹேமா said...
கலை,கேடுகெட்ட நாட்டில ஏண்டா பிறந்தோம் எண்டு கிடக்கு.சீ...சீ தூ...தூ...எண்டு எங்களுக்கு நாங்களே மூஞ்சில காறித் துப்பிக் கொள்ளுவம்.வேற என்ன செய்ய முடியும் எங்களால்.

நாட்டில சனம் ஒரு சொட்டுத் தண்ணிக்கு,ஒற்றை பருக்கைச் சோத்துக்குத் தவமாக் கிடக்க...
உதென்ன ஊருக்கு,வெள்ளை வேட்டி கட்டிக் காட்றாங்கள்.உள்ளுக்குள்ள ஊத்தை யாருக்கும் தெரியாது என்கிற நினைப்பாக்கும்...!///

::::::::::::::::::::::::::::::
வாங்க ஹேமாக்கா ஏன் கோபம்? ரொம்ப கோபடாதிங்க! ஓகேவா?

kuma36 said...

//Suresh said...
நண்பர் கலை - இராகலை உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்//.

வாங்க சுரேஸ் ! நன்றி நண்பரே!

kuma36 said...

//வேத்தியன் said...
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...//

::::::::::::::::::::::::
வாங்க வேத்தியன்! மிக்க நன்றி நண்பரே!

kuma36 said...

//அகநாழிகை said...
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.
உங்கள் பதிவுகளை முழுமையாக படித்துவிட்டு பின்னர் வருகிறேன்.

- பொன். வாசுதேவன்///

::::::::::::::::::::::::::::
வாங்க அகநாழிகை மிக்க நன்றி நண்பரே!
அகநாழிகை டைட்டில் நல்லாயிருக்கு!

kuma36 said...

//SASee said...
கலை அவர்களே
என்ன சொல்வது.......எங்கள் நிலைமைக்கு.....
நீங்கள் சிங்கள
மொழிச் செய்திகளை பார்ப்பது அல்லது கேட்பதுண்டா..?
விரும்பியோ விரும்பாமலோ என்னால் தினமும் பார்க்க அல்லது கேட்டக கிடைக்கும்.
அதிகமான சிங்கள ஊடகங்களில்
நம்ம தமிழ் செய்திகளுக்கு புறம்பான செய்திகளையே கேட்டகூடியதாக இருக்கு, அதாவது, இந்த சிங்கள தேசத்துக்கு நம்மமேல ஒரு தனி அன்பும் ஆறுதலும் இருப்பது போல,
நம்ம அரசியல் வாதிகள் அந்த காலம் தொடக்கம் இந்த காலம் வரை தம் உள் ஒன்று நினைத்தும் வெளியொன்றுகாட்டுயுமே வருகிறது.
இது தமிழ் மக்களுக்கு புரிந்தது புறாதன காலத்திலே,

தமிழன் தன்மானத்தோடு வாழ்வது எப்போது....?////

::::::::::::::::::::::::::
வாங்க சசி! நெரைய கேள்வி கேட்டு இருக்கின்றீர்கள்! பதில்???????

Sinthu said...

இது தான் நம் வாழ்க்கை என்றாகிவிட்டதே..

வெத்து வேட்டு said...

what the heck..let's start blasting some claymores in up-country too

.