கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, October 22, 2008

நான்,சினிமா இன்னும் பல...

இந்த சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு என்னையும் அழைத்து ஊக்கபடுத்தியதர்கு மிக்க நன்றி லோஷன் அண்ணா .

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
ஐந்து வயதில் நான் பார்த்த முதல் திரைப்படம் (ஜெமினி திரை அரங்கு- இராகலை) பந்தம் பாச பந்தம், ஆனாலும் அத்திரைப்படம் நினைவில் இல்லை. அதன் பிறகு நான் பார்த்தது சின்ன தம்பி திரைப்படம்.அந்த படத்தில் வரும் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளை பார்த்து மிகவும் ரசித்தேன்.அதோடு அதில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இன்னும் நினைவில் இருக்கும் அளவிற்கு காட்சி அமைப்புகள் இருந்தது.குறிப்பாக பிரபுவின் சிரிபிள்ளைதனமான நடிப்பு நடிப்பு சூப்பர்.


கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அண்மையில் வெளிவந்த அர்ஜுன் நடித்த துறை திரைப்படம்.(சமந்தா திரையரங்கு- தெமட்டகொட) படம் பார்க்கும் அளவிற்கு சுமாராக இருந்தது.வழமையான அர்ஜுனை பார்க்கக்கூடியதாய் இருந்தது இமானின் இசை அவரின் பழைய இசையை நினைவூட்டி ரசிக்கும் படியாக இருந்தது. குறிப்பாக ஆயிரம் ஆயிரம் ஆசிகளை வாங்கிய வீடு இது... பாடல் இனிமை.

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
நான் சினிமா DVD ,CD களை வாங்கி படம் பார்ப்பது கொஞ்சம் குறைவு காரணம் wwe Wrestling ல் அதிக நாட்டம் உண்டு , அதிலும் John Cena என்றால் ரொம்பவே பிடிக்கும்.
அண்மையில் டிவியில் புதுபுது அர்த்தங்கள் படம் பார்த்தேன். படத்தை விட பாடல்களை மிகவும் ரசித்தேன். "கல்யாண மாலை கொண்டாடும்......" இந்த பாடல் ரொம்பவே எனக்கு பிடிக்கும் '' சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு சிரிக்காத நாள் இல்லையே....... '' இந்த வரி ரொம்பவே பிடிக்கும் . விழித்திருந்து படம் பார்ப்பது குறைவு. ஆனாலும் இப்படத்தை பார்த்ததற்கு விசேட காரணம் உண்டு. எனது பாடசாலை கால நண்பனான (இப்பவும்தான்) செல்வகுமார் இப்படத்தை, அவனது காதலி (முன்னைய ///இப்போது யாருன்னு சத்தியமா எனக்கு தெரியாது ) பார்க்க சொன்னதால் தேடி அலைதோம் CD கிடைக்க வில்லை. ஏன் பார்க்க சொல்லியிருபால் அந்த கேள்விக்கு விடை தேடவே இப்பொது பார்த்தேன். (பார்க்கும் போது நண்பனுக்கு SMS மூலம் நினைவு படுத்தினேன்) ஆனாலும் விடை கிடைக்கவேயில்லை. என்ன கொடுமைனு பாத்திங்களா ? Ladies are very dangerous

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
சேது, குணா, நாயகன் , பாசமலர், சுமைதாங்கி, பருத்திவீரன், கஜனி,மொழி, அடுத்து பிரியதவரம் வேண்டும் இந்த படம் 2000 ம் வெளிவந்த போது நான் O/L எக்ஸாம் எழுத ஆயுத்தம் அதில் நெறைய பிரிவுகளை சந்தித்த போது சொல்லிலடங்காத வேதனை இருந்தது.அதோடு நான் ஒரே பாடசாலையில் 11 வருடம் படித்து பிரியும் போது , இப்ப நினைத்தாலும் அத்தருனங்கள் கண்கலங்க வைக்கும். அந்த சமயத்தில் பார்த்த படம் என்பதால் நெறயவே தாக்கியது .

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
இதுவரையில்லை.

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அவ்வளவு ஆர்வம் காட்டி வசிப்பதில்லை காரணம் தெரியவில்லை அல்லது புரியவில்லை

தமிழ் சினிமா இசை?
மனதுக்கு இனிமையான அனைத்து இசையும் மிகவும் பிடிக்கும்
குறிப்பாக இளையராஜா , வித்யாசாகர் , A.R.ரஹ்மான், யுவன் இவர்களின் இசையில் அதிக பிரியம் உண்டு.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
மனதை தாக்கும் அளவுக்கு உள்ள படம் ஏதும் இன்னும் பார்க்கவில்லை, பார்த்த படங்களும் அப்படியில்லை.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவும?
இல்லவே இல்லை

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சரியா சொல்லத்தெரியல

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு சந்தோஷம் தான்.

காசு கொஞ்சம் மிச்சம்.
தியட்டர் உரிமையாளர்களின் குடும்பம் ???????????

2 comments:

Vathees Varunan said...

வணக்கம் கலைக்குமார்
பெயரிலையே கலையை வைத்து இருக்கிறீர்கள்.வலையுலக்திலும் கலக்க வாழ்த்துகள்
உங்களுடைய வலைப்பதிவை என்னுடைய பதிவில் இணைத்து இருக்கிறேன்

kuma36 said...

வணக்கம் வதீஸ்வருணன்
மிக்க நன்றி. உங்கள் மூலம் தான் நான் இணையத்தி தமிழில் எழுத கற்று கொண்டேன்.
அதை என் வலைப்பதிவிலும் நான் எழுதிவுளேன்
http://ckalaikumar.blogspot.com/2008/10/blog-post_5113.html

.