கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Thursday, February 19, 2009

தியானம்


ஐவகைத் தியானங்கள்

1.அன்பு தியானம்

இதில் அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகவும் நீ ஏங்க வேண்டும்.எதிரிகளின் மகிழ்ச்சியையும் நாட வேண்டும்.அதற்காக உனது இதயத்தை தயார்படுத்த வேண்டும்.

2. கருணை தியானம்

இதில் துன்பப்படுகின்ற உயிர்கள் அனைத்தயும் நினைத்து,அவர்களது துன்பங்களையும் துயர்களையும் கற்பனையில் நீ அனுபவிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் மீது ஆழ்ந்த கருணையை உனது உள்ளத்தில் ஏற்படுத்த வேண்டும்.

3.ஆனந்த தியானம்

இதில் பிறர் வளம் பெறுவதை எண்ணி அவர்களின் மகிழ்ச்சியில் நீ மகிழ வேண்டும்.

4. அசுத்த தியானம்

இதில் நேர்மையற்ற செயல்களின் விளைவாக நேர்கின்ற கேடுகளையும், பாவச் செயல்கள், நோய்கள் இவற்றின் விளைவுகளையும் சிந்திக்க வேண்டும்.இன்பம் கண நேரம்தான், அதன் விளைவு எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்க வேண்டும்.

5.அமைதி தியானம்

இதில் அன்பு, பகைமை, அடக்குமுறை, செல்வம், வறுமை ஆகியவற்றைக் கடந்து அப்பால் செல்ல வேண்டும்.பாரபட்சமற்ற அமைதியோடும், முழுச் சமத்துவ உணர்வோடும் உன் தலைவிதியைப் பார்க்க வேண்டும்.

Wednesday, February 11, 2009

நகைசுவை முக்கியம் ஏளனம் கூடாது

நீ சிரித்துக்கொண்டு வாழும் ஒவ்வொரு நொடியிலும் உன் ஆயுளில் ஒரு நொடி அதிகரித்து செல்கின்றது என சொல்வார்கள். அதாவது எவ்வளவுக்கு, எவ்வளவு நாம் சிரித்து வாழ்கின்றோமோ அவ்வளவிற்க்கு நாமூம் நாம் சார்ந்த சமூதாயமும் நம்ம சூழவுள்ளவர்களும் மகிழ்ச்சியடைவர். சிரிப்பு எவ்வள்வு முக்கியம் என்பதுப்பற்றியெல்லாம் நாம் நிறைய படித்திருப்போம். அதில் அடுத்தவரை இழிவுப்படித்தியோ அல்லது ஏளனம் செய்து சிரித்து மகிழும் ஒரு ரகம் உண்டு. அந்த சிரிப்பு அள‌விற்க்கு அதிகமானால் சகித்துக்கொள்ள முடியாது. பாடசாலை நாட்களில் இவ்வகையான கேலிப்பேச்சுக்கள் அதிகமாக இருக்கும். அந்த கேலி பேச்சுக்கள் சில சமயம் வரம்புமீரி போய் பல விபரீதங்கள் நடந்ததும் உண்டு.

மற்றவர்களை கேலி செய்து அகம் மிகிழ்வது என்பது ஒரு உண்மையான மகிழ்ச்சியை தராது.இப்படி கேலி செய்வதால் மற்றவ்ர்கள் மீது தனக்கு உள்ள உரிமையை வெளிக்காட்டவே அதிகமானோர் கேலிப்பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர்.தன் உரிமையை காட்ட தன் நண்பனை மற்றவர்கள் முன்பு தலை குனிய செய்யலாமா?
அதுவும் பாடசாலை காலங்களில் இப்படிப்பட்ட கேலிப்பேச்சுக்கள் பொதுவாக சுவார்ஸ்யமாகவே இருக்கும். யாராவது ஒருத்தன் மாட்டினா போதும் அவனை கலாய்ச்சுட வேண்டியதுதான். அத நாங்க பைய்ட் ஆக்குறதுனு சொல்லுவேம். அந்த மாதிரியான கேலிப்பேச்சுக்கள் கட்டாயம் பாடசாலை காலங்களில் தேவைதான்.அப்போது தான் அந்த பசுமையான நாட்களை நாம் கண்மூடும் வரை நெஞ்சில் நிறுத்திக்கொள்ளலாம்.

பாடசாலைக்குப் பிறகு வேலை தளங்களில் இவ்வகையான கேலிப்பேச்சுக்களை வைத்துக்கொள்ளும் அது பல விபரீதங்களை உண்டுப்பன்னலாம்.பல்வேறு சமூகத்தினர் ஒன்று கூடி வேலை செய்யும் போது தன்னை மற்றவர்கள் கேலி செய்வதை விரும்ப மாட்டார்கள்.பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வேலை செய்யும் போது மனதிற்க்கு இதமாக ஒரு நகைச்சுவை இருந்தால் நன்றாக தான் இருக்கும் அது ஒரு கேலிக்கையாக மாறாதப்பட்சத்ததில். ஒவ்வொரு தனி மனிதனும் தான் எவ்வளவு தாழ்தவனாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி ஒரு மதிப்பீடு வைத்திருப்பர்.எமது கேலிப்பேச்சுக்களால் அவர்களின் அவர்களது மதீப்பீடு மாறும்ப்பட்சத்தில் மிகவும் வருத்தமடைய கூடும். மற்றவனை கவலையடைய செய்து நாம் சிரிக்க தான் வேண்டுமா? எந்த விடயத்தையும் சிரிப்புடன் சொல்வது நல்லது தான் , அது அடுத்தவரை பாதிக்காத வரை.

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

பி.கு. ஏதோ சொல்ல வந்து ஏதோ செதப்பலா சொன்ன மாதிரி ஒரு உணர்வு.சரியா சொல்லியிருக்கேனா அப்டினு நீங்க தான் சொல்லனும்.

Wednesday, February 4, 2009

மனிதனுக்குள்ளே இருகின்ற விஷம்


"பொருத்தார் பூமி ஆள்வார்கட", "பொருமை கடலை விட பெரிது" , நல்லதோ கெட்டததோ பொருமை கொண்ட மனிதர்கள் திகைப்போ அச்சமோ கொள்ள மாட்டார்கள் அவர்கள் எப்போதுமே அமைதியாய் தான் இருப்பார்கள், என்பதெல்லாம் பெரியோர்களின் கூற்று. இப்படி இருக்கையில் தொட்ட தொன்னூறுக்கும் கோபம் கொள்பவர்களே அதிகம்.அன்றாட வாழ்க்கையில் வீட்டிலோ,பாடசாலைகளீளோ,அலுவலகங்களிளோ எத்தனையோ பேர் கோபம் கொள்வதை பார்த்திருப்போம். கோபம் வந்தவுடன் யார் எவர் என்ற வித்தியாசமே இல்லாமல் தனக்கு கிடைத்த வார்த்தைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளி வீசிவிடுவார்கள்.


அப்படிப்பட்டவர்கள் ஒரு கனமேனும் சிந்திப்பதில்லை வார்த்தைகளின் வலியை. வார்த்தைகளால் வசைப்பாடிவிட்டு பின் வருந்துவதெல்லாம் கண்கெட்ட பின் நமஸ்காரமே, அவர்களின் வருத்ததால் பாதிக்கப்பட்டவருக்கு எந்த பிரயோசனமும் இல்லை.கோபம் இருக்கின்றவனிடம் குணம் இருக்கும் என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சாகவே தான் இருக்கமுடியும்.இப்படிதான் நான் முன்பு வேளை செய்த நிறுவனத்தின் இயக்குனர் திடிரேன கோப்பட்டு தனது ஒரு லட்சம் பெருமதியான கையடக்க தொலைபேசியை ஓங்கி அடித்து நொருக்கி விட்டார் பிறகு அதற்க்காகவே வருந்தியும் கொண்டார்.கோபம் தீ போன்றது எரிய கூடிய பொருளை எரித்துவிட்டு பின் தானும் அணைந்து போகின்றது அதனால் எந்த பயனும் இல்லாத போது ஏன் நாம் அனாவசியமாக கோபப்படவேண்டும்.



கோபத்தால் அழிந்து போன எத்தனையோ சாம்ராஜியங்களை படித்திருக்கின்றோம் எத்தனையோ கல்விமான்கள் கோப்பத்தைப்பற்றி பல கருத்துக்களை சொல்லியும் கோபப்படுவதென்பது இன்னும் எம்மிடம் குறைந்தப்பாடில்லை, காரணம் இன்னும் புரியவில்லை. கோபம் முதலில் கோபப்ப‌டுபவனைதான் முதலில் நிலைகுலைய செய்கின்றது பின்புதான் மற்றவர்களை பாதிக்கின்றது.புகைத்தல் புற்று நோயை உண்டுப்பண்ணும் என்று தெரிந்தே புகைப்பவர்களும், கோபம் தன்னையே அழிக்கும் என்று தெரிந்தே கோபப்படுபவர்களும் அவர்களே பார்த்து சிந்தித்து நடந்து கொண்டால் தான் உண்டு. கடுமையான சொல், கோபம் போன்றவை மனிதனுடைய வீரியகுணங்களால் உருவானவை என்பார்கள் ஆகவே ஒரேடியாக அவைகளை நிறுத்த முடியாவிட்டாலும் மெல்ல மெல்ல மெல்ல முயன்றால் முடியாது என்பது கிடையாது. மனிதனுக்குள்ளே இருகின்ற விஷம் கோபம் மட்டும் தான்
கோபத்தை அன்பாலும், தீமையை நன்மையாலும், பேராசையைத் தாராள குணத்தாலும், பொய்யை உண்மையாலும் வெற்றிக்கொள்

Sunday, February 1, 2009

கெளதம புத்தரின் கேள்வி பதில்கள்

கெளதம புத்தர் ஜேத வனத்தில் தங்கியிருந்தபோது அவரிடம் கேட்ட சில கேள்விகளும் அவரின் பதில்களும்.

மிகவும் கூர்மையான வாள் எது?
கோபத்தில் கூறப்படும் வார்த்தை

மிகவும் கொடிய நஞ்சு எது?
எல்லாம் எனக்கு வேண்டும் என்கின்ற எண்ணம்

மிகவும் பெரிய தீ எது?
ஆசை

மிகவும் இருள் நிறைந்த இரவு எது?
அறியாமை

மிகப் பெரிய பலனை அடைபவன் யார்?
பிறருக்கு தருபவன்

அனைத்தையும் இழப்பவன் யார்?
பிறரிடம் பெறும், அதனை ஈடு செய்யும் வகையில் மற்றவர்களுக்கு கொடுக்காதவன்.

தோல்வி அடையாத ஆயுதம் எது?
பொறுமை

மிகச் சிறந்த ஆயுதம் எது?
ஆறிவு

மிகப்பயங்கரமான திருடன் யார்?
தீயசிந்தனை

மிக மேலான் செல்வம் எது?
தர்மம்

மிகவும் பாதுகாப்பான் புதையல் எது?
மரணமிலாப் பெருநிலை

வசிகரமானது எது?
நன்மை.







.