கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, December 20, 2010

சந்தியில் நடந்த கதை

இது!
சந்தியில் நடந்த கதை
சந்தியே சிரிந்த கதை.
கடலைக்கடந்து ‍ நாங்க‌
சிலோனுக்கு வந்த கதை,
மேடுபள்ளம் ஏறி நாங்க‌
வியர்வை சிந்தி உழைத்த கதை!

அரை வயிறு நிறையாம்
அல்லல்பட்டு வாழ்ந்த கதை,
இருட்டிலேயே எங்க வாழ்வு
இன்னும் இருக்கும் கதை.

துரைமார் எச்சரிக்க,
கங்காணி நச்சரிக்க வாழ்ந்த கதை,
குழந்தை அழும் சத்தம் கேட்கையிலும்
குலையாமல் உழைத்த கதை.

தேயிலை நட்டு வைத்து
தேகமெல்லாம் நொந்த கதை,
தேசம் உயர்ந்தாலும்
வேதனைகள் நிறைந்த கதை.

தலைவர் என்று சொன்னாலே
தலை சொறிந்து நின்ற கதை,
தண்ணியில மிதந்து
தத்தளித்து வாழ்த்த கதை.

அப்பன் ஆத்தா செத்த பின்னும்
அயராது உழைத்த கதை,
உறவுகளை புதைத்த மண்ணில்
ஏறி நாங்க மிதித்த கதை.
இந்தியாவுக்குத் தெரியாது
நாம் இங்கிருந்து சாகும் கதை,
இந்த இலட்சணத்தில்
இந்திய தமிழன் என்று சொன்ன கதை.
ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு
ஓடாகிப்போன கதை,
தலைவணங்கித் தலை வணங்கித்
தலைமுறையாய் நடந்த கதை.

விலைபோகா மனிதர் நாம்
வீதியிலே நின்ற கதை,
உழைப்பெல்லாம் உணர்வாக்கி
வீராப்பாய் இருந்த கதை.

லயம் லயமாய் மக்கள் வெள்ளம்
சந்தியிலே சேர்ந்த கதை,
சம்பளத்தை கூட்டச்சொல்லி
சத்தியாக்கிரகம் இருந்த கதை.

உறவுகள் பசித்திருக்க‌
உறுதியாய் நின்ற கதை,
உரிமை என்று கேட்டதை
உலகமே அறிஞ்ச கதை.

சம்பளத்தை எதிர்பார்த்து
சனமே வீதியில நின்ற கதை,
ஒத்த ரூபா சம்பளத்தை உயர்த்திவிட்டு
த்லைவர்கள் கோசம்(வேசம்) போட்ட கதை.

கிம்பளத்தை வாங்கிக்கிட்டு
சம்பளமே இல்லனு சாமிங்க சொன்ன கதை,
சரிதிரமே வாய்விட்டு அழுத போதும்
சரிங்க சாமி போட்ட கதை.

மல்லியப்பூச் சந்தியிலே
மக்கள் வெள்ளம் திரண்ட கதை,
தேசம் வளர்த்தவங்க தேகம் நொந்து
பரம்பரையாய்ச் செத்த கதை.

இது
சந்தியிலே நடந்த கதை
சந்தியே சிரிச்ச கதை,
சாமி எல்லாம் சேர்ந்து
நமக்கு சமாதி செஞ்ச கதை.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html


Wednesday, April 7, 2010

மரணம் செதுக்கிய உயில்


என் மனதுள் நுழைய
முனைந்து முனைந்து என்னால்
வுpரட்டப்படாமல்
வாசலில் நிற்பவனே!!

உனது அன்பின் ஆழம்
மாவலி கங்கையின் நீளத்திலும்
நீளமானது
அறிவேன் நன்கு.

என் விழிகளில் விழிநுழைத்து
முகம் புகழ்ந்து
பருவத்தின் மீது புராணம் பாடி
பாதசுவடுகளின் மீதுலவுகிறாய்
என் செய்வேன்?
உன் மீது
பரிதாபம் மட்டுமே பட முடிகிறது

உலகம் நானென்கிறாய் உலக
விந்தை நானென்கிறாய்
கவிதைகளும் காட்சிகளும்
அனைத்தின்பமும் நானென்கிறாய்
எத்தனைப் பொய்!!!

பகலின் இரவுகளில் நாடு கடத்தப்பட்டு
காடுகளின்
சுதந்தர சிறைகளில்
மனித இயந்திரங்களாய்
இருநூறாண்டுகள்
இருளுக்குள் உழலும் மக்கள்
கூட்டத்திலிருந்து
எழுந்து வந்தவன் நீ
நினைவுகளை ஞாபகத்திற்கழை.

எவனெவன் வாழ்வுக்கோ உதிரம் சிந்தி
உழைத்து மரிக்கும்
அறியாமைகளுக்கு
உiiவிட்டால் ஒளிப்பிழம்பு யார்?

உலக விழிகளால்
மறுதலிக்கப்பட்ட் அந்த உலகம்
உன்னிடம் எதையெதையோ
பார்த்திருக்கிறது!!!
அதன்
காய்ந்து
வறண்ட தொண்டைகளில்
தாகம் ஏக்கம்
பசி கனவு!

விழிகளுக்கு மிக அருகாமையில்
விழித்து நிற்கும்
பொறுப்புக்கள் கடமைகள் துறந்து
மேல் வர்க்க இளைஞனாய்
வாலிபத்தை
சல்லாபத்தி விடுகிறாய்.

எத்தனை துயரேற்றாள்
உன் தாய் உனை ஈன்;: உனை வளர்க்க??

எத்தனை இடர் கடந்தார்
உன் தந்தை நீ பள்ளி செல்ல??
எத்தனை துன்பமுற்ற
மக்கள் கூட்டம் உன் மண்ணில்??

விருப்பமில்லா விடுமுறையில் உன்
ஏழையூர் விரைகையில்
;அம்மனிதரின் விழிகளில்
இல்லாமையும் இயலாமையும்
இணைத்திசைக்கும்
துயர கீதங்களை
கேட்டிருக்கிறாயா?

ஒழுகும் கூரைகளின் கீழ்
உறக்கங்களை வழிய விட்ட
இரவுகளின் அழுகையொலிகள்
எட்டியிருக்கறதா செவிகளுக்கு?

பசுமை அடர்ந்த உயர்ந்த மண்ணில்
தாழ்வுடைய வறண்ட வாழ்வின்
சுமைகளை
தராசிலிட்டிருக்கிறாயா?

இனத்தால் பொருளால்
சாதியால் நிறத்தால் விலக்கப்பட்டவர்களுக்கு
விடுதலைக்காய் முழங்கப்போகும்
குரல் யாருடையது??

பரம்பரையை பரிசளித்து வளர்த்த
மண்ணை மூழ்கடிக்கும்
அதிகாரங்களுக்கெதிராய்
நிமிர்வது யார்??
விடைகாணா வினாக்கள்
ஆயிரமிருக்க நீயோ…..

வலிமையை இளமையை
என் நடை பாதையெங்கும்
பூக்கள் விரிக்க சிந்திக் கொண்டிருக்கிறய்…

இளமையின் சுகிப்பை வியர்வையூரிய
கருப்பு மண்
தந்த எழுத்துக்களால் அலங்காரப்படுத்துகிறாய்.
எப்போது அவர்களின்
அழுகை தடுக்கும்
ஆயுதம் செய்ய உன் அறிவை
கருவாக்கப் போகிறாய்???

இங்கு உன்னையும் என்னையும்
இணைத்த இப்பெரும் அறிவாலயம்
மனிதர்களுக்கான மனிதர்களை
உரு செய்யவே உழைக்கிறது.

இங்கு மனிதனாவது சாதரணம்!
மனிதர்களுக்கான மனிதராவதே சாகாவரம்.
நீ
சாகாவரம் பெறு அப்போது
உன் காதல்
மறுபரிசீலனைக்குற்படலாம்!!
ஏனெனில்
நான் நம் மண்ணையும் மக்களையே
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்

எஸ்தர் லோகநாதன் (பேராதனை பல்கழைக்கழகம் இலங்கை)
திருகோணமலை

Sunday, April 5, 2009

சிரட்டையும் மண்ணும்



நானும் நீயும்
ஓடிப்பிடித்து விளையாடிய‌
ஒற்றையடிப்பாதை,
காடுப்பத்தி...
காணாமல் போயிருந்தது

சலசலத்து
சங்கீதம் பாடி!
ஊரின் நடுவால்
ஊடறத்து ஓடிய‌
ஆறுகள் இரண்டும்
அடையாளமற்றுப்போயிருந்தன‌

ஊஞ்சல் கட்டி ஆடிய
எல்லைப்புற ஆலமரம்
எப்படி மறைந்தது
சுவடுகளற்று...
கறையானும் பாம்பும்
வாழ்வதற்காய்
புதிதாக அங்கே
புத்துகள் முளைத்திருந்தன‌

ஊர்ப‌ற்றி
ஒவ்வொரு நினைவும்
ஊசியாய் குத்தியது மனசை

திரும்பிடும்
திசைகள் தோறும்
நமதான ஞாபங்கள்
கைகாட்டி முறுவலிக்கிறது

கிட்டி, கிளித்தட்டு
பட்டம், பம்பரம்
மறந்துபோன விளையாட்டுக்கள்
மறுபடியும்
ஞாபகம் வந்தது

மயானத்தை
நினைவூட்டுவதாய்
நமதான..
அழகிய கிராமம்

அழுக்காகிப்போன‌
நினைவுகளை...
தூசுதட்டி,துடைத்து
வாசிக்கையில்
அழுகை வந்தது

தூரத்தில்
சிரட்டையும் மண்ணும்
சிதறிக்கிடந்தன..
விளையாட யாருமில்லாமல்.

நன்றி
நாச்சியாதீவு பர்வீன்
நூல் : சிரட்டையும் மண்ணும்.

Wednesday, March 18, 2009

உன் பார்வை

நீ
கடந்து
போன தடயமே
இல்லாமல்
அமைதியாய்
இருக்கிறது
வீதி.!

ஆச்சரியம்!
அதி வேக‌
ரயிலொன்று
கடந்து போன‌
தண்டவாளம் போல்
இன்னும்
அதிர்கிறது
என்
இதயம்.

Sunday, March 15, 2009

தந்தைக்கு ஒரு தாலாட்டு

கவிஞ்சர் மு.மேத்தா அவர்களின் "இதயத்தில் நாற்காலி" என்ற நூலில் தந்தைக்கு ஒரு தாலாட்டு என்ற கவிதையை படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. நீண்ட நாட்களாகவே இந்த கவிதயை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். நேரம் இதோ வந்து விட்டது. நான் இரசித்த கவி நீங்களும் இரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்...

தந்தைக்கு ஒரு தாலாட்டு

துருதுருத்த கவலைகளில்
தூக்கமில்லா இரவுகளில்
தவிதவிக்கும் தந்தையே!
நான்
தாலாட்டுப் பாடட்டுமா?

ஓய்வெடுக்க மனமின்றி
உழைப்பதற்கும் வழியின்றி
பாய் வெறுத்த தந்தையே
நான்
பாட்டொன்று பாடட்டுமா?

நீதியின் பாதையிலே
நெடும் பயணம் நடத்தியதால்
பாதியாய் ஆனவரே
நான்
பாராட்டுக் கூறட்டுமா..?

தேரோடும் கனவுகளைத்
தெருவேடு அனுப்பிவிட்டுப்
போராடி வாழ்ந்தவரே
நான்
புகழ்மாலை போடட்டுமா...?

ஒன்பதாம் வயது முதல்
உருகியதை அறியாத‌
மெழுகுவர்த்தி தேம்புவதை
நான்
மேடை கட்டிப் பேசட்டுமா?

சற்று நீ கண்மூடி
சாய்ந்திருப்பாய் தலையணையில் உன்னைத்
தட்டிக் கொடுப்பதற்கு
நான்
சந்திரனை அனுப்புகிறேன்!

உன் கண்ணை மூடி நீ
ஓய்வெடுப்பாய் சிறுநேரம் நீ
தூங்கி விழித்தவுடன்
நான்
சூரியனை அனுப்புகிறேன்!

பூமி உனக்களித்த‌
புழுக்கத்தை நீ மறந்து
கண் துயில்வாய் சிறு நேரம்
நான்
காற்றை அனுப்புகிறேன்!

வாழ்க்கை உனக்குச் செய்த‌
வஞ்சகத்தை நீ மறந்து
சிறுபொழுது கண்ணயர்வாய்
நான்
தென்றலை அனுப்புகிறேன்!

விடிந்தால் என் வாழ்வில்
வெளிச்சம் வரும்! வந்தவுடன்
அடைந்த வெளிச்சத்தை
நான்
அப்படியே அனுப்புகிறேன்!

மு.மேத்தா
நூல்:இதயத்தில் நாற்காலி


Friday, March 13, 2009

பிரியமானவளே


என்
பிரியமானவளே!
உள்ளத்தில்
சுடர்விட்டெரியும்
தீயை
கண்ணீர் துளி
கொண்டு அணைக்க‌
முயல்கின்றேன்


கண்ணீரே இல்லாமல்
வரண்ட விட்ட‌
என் கண்கள்
நீயின்றி
உன்
நினைவுகளுடன்
உறங்க மறுக்கின்றது
என்பதை நீ
அறிவாயா?

யார் எது
கூறினால் என்ன‌?
உன் மீது
நான் கொண்ட‌
அன்பும்
என் மீது
நீ கொண்ட அன்பும்
மாறிடுமோ?

கனவை தந்தவளே
என்
கண்மணியே
உறக்கத்தை மட்டும்
பறித்தாயே!

உன் மீது
கொண்ட காதலுக்கு
காலமே பதில்
சொல்லட்டும்.


- சானா.கலை
இராகலை

Thursday, March 5, 2009

முரண்களின் முகவரி

கொள்ளைக்காரனிடம்
தப்பி வந்து
காக்கிச்சட்டையிடம்
பறிகொடுக்கும் நீ!

~~~~~~~~~~~~~~~~~~

வயிற்றுப் பிழைப்பிற்காய்
வெளிநாடு சென்று
வயிறு சுமந்து வரும் நீ!

~~~~~~~~~~~~~~~~~~

காமுகனிடம்
தப்பித்து
காதலனிடம் கற்பிழக்கும் நீ!

~~~~~~~~~~~~~~~~~~

வறுமைக் கோட்டை கடக்க‌
ஆயுள் ரேகை அழிய‌
உழைத்து உயராத நீ!

~~~~~~~~~~~~~~~~~~

நீ என்ன‌
முரண்களின் முகவரியா?
யார் யாரையோ
குளிர்ச்சிப்படுத்தும்
கவரியா?

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Monday, February 16, 2009

வாழ்த்துக்கள்



எத்தனை
விடியல்கள்
உன்னை
ஏமாற்றின?

ஒவ்வொரு
விடியலிலும்
எதிர்ப்பார்ப்பு?

இன்றாவது
கிடைக்குமா
ஓர்
நற்ச்செய்தி
என்ற ஏக்கங்கள்
எத்தனை

பல பொழுதுகள்
கழிந்தாலும்
மனம் தளராத‌
என்
தோழிக்கு
இன்று
கிடைத்ததாம்
தேங்கியிருந்த‌
தொழில் நியமனம்.

உன் திறமையுடன்
பொறுமை சேர்ந்ததால்
காலம் கனிந்தது!!
வெற்றி உன்வசமானது!!

வாழ்த்துக்கள் தோழியே
இனி உன்
காலம் பொற்காலமாகட்டும்.

- சானா.கலை
இராகலை

Friday, February 13, 2009

காதல்


காதல்
ஒரு கடல்
நீந்திகடந்தவர்கள்
இன்பப்டுகிறார்கள்
மூழ்கி கவிழ்ந்தவர்கள்
துன்பப்ப்டுகிறார்கள்.
ஆயினும்
ஆயிரம்
கனவுகளோடு
ஆயிரம்
இதயங்கள்
அதன்
கரையினில்....

காதல் வாழ்க!!!
காதலர்கள் வாழ்க!!!

- சானா.கலை
இராகலை

Thursday, January 29, 2009

அழாதடா

எம் கண்ணீர்
துளி
சிப்பிக்குள்

வீழ்ந்து,
பல நூறு

முத்து க்களாய்
வெளிவரும்

Wednesday, January 28, 2009

கட்டபொம்மன்

தூக்குக் கயிற்றை
நீ வீரத்தோடு முத்தமிட்டாய்
தூக்குக் கயிறே
துக்கக் கயிறானது அன்றுதான்!!

தன் மயிருக்காக‌
பிச்சையேந்தி பலர் நின்றபோது
தன் உயிருக்காகக் கூட‌
அடங்கிபோகாத வீரன் நீ!

உன் குரலில் ஒலித்த ஒலி
உன் சுவாசக்காற்றல்ல
மக்களின் மூச்சுக்காற்று!

வெள்ளைக் கழுகளுக்கு
சேவகம் செய்த‌
நரிகளுக்கு மத்தியில்
வீரத்தோடு கர்ஜித்தவனே!

அது எப்படி முடிந்தது உன்னால்?
எல்லோருக்குமாக சுவாசிக்க,
எல்லோருக்குமாகவும் இறக்க,
இறந்தும் இறவாமல் இருக்க!

எல்லோருக்குமாக சுவாசித்தவன் நீ
எல்லோரும் சுவாசித்தார்கள் உன்னை.

தோள் பிடித்து, கால் பிடித்து,
சிம்மாசனக் கால்களுக்குக் கீழ்
எலும்புதுண்டுகளையாய்
காத்து கிடந்த எட்டயப்பர்கள்
உன்னை பார்த்துக் குரைத்தபோது
உன் வீரத்தால் அவர்களை முறைத்தாய்.

தூக்குக் கயிற்றில் தொங்கியது
உன் தலையல்ல.
ஒரு சமூகத்தின் விலை!
எங்களுக்கு விட்டுசென்ற‌
புரட்சி எனும் கலை!!!!

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Friday, January 23, 2009

மழை


வெண்ணிறப் பொட்டிட்டு
மேக உடையணிந்த‌
வான தேவதையே!!
உன் ஆடையை
காற்று வில்லன்
கலைத்த‌தால் ‍ நீ
சிந்துகின்ற கண்ணீர்தான்
மழையோ!!!
- சானா.கலை
இராகலை


Wednesday, January 14, 2009

மாறிகள்


இதுவரை
மாறியாய் இருந்த நீ
திடிரென மாறிபோனாய்

கூட்டல், பெருக்கல்
என்பவற்றில் தானே
நீ குறியாக இருந்தாய்

இப்போது..
க்ழித்தலில் கவனம்
செலுத்த.. காரணமென்ன?

அடைப்புக்குறிக்குள்
வைத்துத்தான்..
நான் உன்னை
அடையாளம் கண்டேன்
நீ - மாறி விட்டாய் என்று
வினாக்குறி என்பது
விளையாட்டுக்காக‌
மட்டுமேதானே!

நீ - இட்டிருக்கும்
விளங்காக் குறிக்கு
விஞ்ஞான விளக்கமென்ன?

சந்திக்கு வந்தேன்
உன்னை சந்தித்து போக‌

நீ - ஏன்
சமாந்திரமாய்
விலகிப்போனாய்

உன் மாற்றங்களால்
நானும்...
மாறியாகி விட்டேன்

இனிமேல் நாமிருவருமே!
"மாறிகள்" தான்

நன்றி
நாச்சியாதீவு பர்வீன்
நூல் : சிரட்டையும் மண்ணும்.

Wednesday, December 31, 2008

ஏழை

எதிர்காலத்தின் மீது
ஏற்பட்ட நம்பிக்கையீனமும்,

நிகழ்காலத்தின் மீது
ஏற்பட்ட பயமும்,

இறந்தகாலம் தந்த வடுவும்
என் முக்காலமும்,

உழைப்பின் மீதேறி
உச்சாடனம் புரிந்து,
அற்ப ஆசையிலேயே
எங்கள் ஆயுள் முடிந்து போவதால்,
நீங்கள் வாழும்
சொர்க வாழ்வை
நாங்கள் எப்போது வாழ்வது!

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Monday, December 29, 2008

ஆயுத பூஜை



தொலைக்காட்சி எங்கும்
மரணங்களின் ஓலங்கள்.
பத்திரிக்கை முழுதும்
உயிர் தொலைத்த முகங்கள்.
தாயே தன் குழந்தைகளை
தாலாட்டிக் கொல்வதா?

குண்டு மாரி பொழிந்து,
உண்டான் பள்ளங்களில்
திரண்டது குருதி.
இறந்த தாயின் முலைப்பால் அருந்தி
அழும் பிள்ளை
வடிந்த இரத்ததை பாலாய் நினத்து
சுவைப்பருகும் குழந்தை.
புதைந்த புதுக் கணவனை
புதைக்ழியில் தேடும் பெண்.
எஜமான் உடல்தேடி
அலையும் விசுவாசமுள்ள நாய்.

அம்மா என்ற அழுக்குரலுக்கு
தாயில்லா வேதனை
அம்மா அழுகின்றபோது
குழந்தையில்லாச் சோதனை.
இத்தனை உயிர்களை கொன்று
புரட்சி ந்டத்த‌
உனக்கென்ன ஆசை?
தாயே! ஆயுத பூசை.

நீ துப்பிய எச்சில்
பராயம் அறியாத பாலகர்கள்,
தாய்மை அடைந்த தாய்கள்,
பருவம் சுமந்த மங்கைகள்,
கனவு மணக்கும் கன்னிகள்,
பாவம் பாமரர்கள்,
தானியம் சுமக்கும் பூமிகள் என‌
அவித்த முட்டயாய்
பரம்பரை
அழிந்துவிட்டதை அறிவாயா?

கரம் இழ்ந்த உயிர்கள்,
கால் இழந்த உடல்கள்,
ஒட்டியிருந்த உயிரை
விடைகொடுத்து அனுப்பும்
விழுந்த செல்கள்.

உயிரற்ற குழந்தயாய்
அணைத்தபடி உயிர்கரைய‌
மூத்த பிள்ளையேத்
தேடும் தாய்.

மண்ணுக்குள் ஒலி வரும்
தேண்டினால் உடல் வரும்.
அன்னையின் வயிற்றில் குழந்தை
ஓர் உடலில் ஈருயிர் மரணம்.

வேட்டை நாயின்
வாயில் சிக்கிய‌
வீட்டுக்க்ருவியாய்
பாவம் மனிதர்கள்.

ஆயுதமே!
உன் ஒவ்வொரு உற்பத்தியும்
மரணங்களையே
விலை கேட்கிறது.

விரலின் விசையில்
தெறித்த குண்டுகள்
பேயாய் தலைவிரிதாடியது.
சிலமணிநேரம் மனிதவேட்டை,
தரைமட்டமாகியது
கட்டிய கோட்டை.

நீ அராஜகக் கோட்டையே
உடைத்திருத்தல் மகிழ்ந்திருப்போம்
அமைதி கோபுரத்தை அழித்ததென்ன?

உன் பசியைப் போக்க
எம் உயிரை ருசிப்பார்த்தாய்.

எங்கோ உற்பத்தி செய்வதற்காய்
இங்கே ஏன் வெடிக்கிறாய்?
இரத்தம் குடிகிறாய்?

உனக்கு சந்தை வேண்டும்
என்பதற்காய்
நாங்கள் சவமாவதா?

உன் கழுகுப் பார்வையில்
எங்கள் எளிமை தேசம்
கவலைக்கிடமாய்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html





Sunday, December 28, 2008

வண்ண மீன்கள்

ஆளுயரக் கண்ணாடி,
வண்ண வண்ணக்
கற்களும், சிற்பிகளும்,
குமிழிகளாக மேல் எழும்
பிராணவாயுக்கள்.
செயற்க்கையாய் ஆடும் பொம்மை,
மங்கிய வெளிச்சத்தில்
அழகான் கண்ணாடி பெட்டியில்
ஆயுள் கைத்தியாய்
அடைக்கப்பட்ட‌
அழகான் மீன்கள் நாம்.

வயிற்றுக்கு உணவாகும்
எம்மில் பல.
பார்வைக்கு உணவாகும்
எம்போல் சில.

தங்கச் சிறையில் அடைத்த‌
தங்க மீன்கள் நாம்.
சாக்கடையில் கிடந்தாலும்,
சுதந்திரமாய் இருந்தோம்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Monday, December 22, 2008

நவின தீவிரவாதி

உனக்கு சுடத்தெரியாது
இருந்த போதும்
உன் வீட்டு மூலை
முடுக்குகளிலும்
வேலியோரங்களிலும்
குப்பை மேடுகளிலும்
துப்பாக்கிகளும் ரவைகளும்
கண்டெடுக்கப்படும்

கைக்குண்டுகளை
நீ கண்டதும் கிடையாது

ஆனபோதும்
உன்பொதிகளுக்குள்
ஏகப்பட்ட குண்டுகள்
இருந்ததற்காய் நீ கைதவாய்

கத்திகளும் அரிவாளும்
நீ காடுகளை
வெட்டுவதற்குதான்
பயன்படுத்திருப்பாய்

ஆனால் கைகளும், கால்களும்
வெட்டப்பட்டதற்கான‌
அடையாளங்கள்
உன் வீட்டுக்கத்திகளில்
அடிக்கடி உன்னை
கைது செய்வார்கள்

எங்கெங்கோ வெடிக்கின்ற‌
குண்டுகளுக்கு,
அடையாள அணிவகுப்பிற்காய்
அழைத்திருப்பர் உன்னையும்
அரச மரியாதையுடன்,

திட்டுவதற்கே
யோசிகின்ற உன் பெயர்தான்
தீவிரவாதிகளின் பட்டியலில்
முதலில் இருக்கும்

நன்றி
நாச்சியாதீவு பர்வீன்
நூல் : சிரட்டையும் மண்ணும்.


Sunday, December 21, 2008

நிஜம்

காகங்களுக்கு பட்டுக்குஞ்சம்
நீங்கள் கட்டிவிட்டதால்
அவை குயில்கள் என்று
ஊரெல்லாம் கூறித்திரிகின்றன.

நரிகளுக்கு நாட்டுச்சாயம்
நீங்கள் பூசிவிட்டதால்
அவை சிங்கங்கள் என்று
சிங்காரித்து திரிகின்றன.

குயில்கள்,
மெளனம் கலைத்து
கூவத்தொடங்கினால்!
சிங்கங்கள்,
சிலிர்த்து கர்ஜிக்கத் தொடங்கினால்!

முணுமுணுக்ககூட முடியாமல்
மூலையில் முடங்கிப் போவீர்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Saturday, December 20, 2008

எதற்காகவோ!

வறுமை வாட்டினாலும் ‍ சில‌
வரிகள் படித்து வைத்தோம்.
வரிகள் படித்துவைத்ததெல்லாம்
வளைந்து கொடுப்பதற்கோ!

பாடுகள் பல் பட்டும் பல‌
பாட்டுக்கள் கோர்த்து வைத்தோம்.
பாட்டுக்கள் கோர்த்து வைத்ததெல்லாம்
பாடையில் வைப்பதற்கோ!

ஏழ்மை தரித்திரத்திலும் சில‌
ஏட்டை எழுதுவித்ததெல்லாம்
ஏட்டுச்சுரக்காடய் ஆவதற்கோ!

பூ மாலை சாந்தி புரியாத பல‌
பூசைகள் செய்து வந்தோம்.
பூசைகள் செய்துவந்ததெல்லாம்
பூசாரி வாழ்வதற்க்கோ!

சக்கையாய் போனாலும் சில‌
சாப்தம் தேயிலைக்கே சந்தாகிப் போனோம்.
சத்தாகிப் போனதெல்லாம்
சந்தியாகி சாவதற்கோ!

இதுவோ! எம்விதி ?
இல்லை இல்லை
இது எமக்கான் சதி
இனியும் பொறுக்காது பொறுத்தால்!
இம்மண்ணே நிலைக்காது.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.

Friday, December 19, 2008

பாழான நாள்

ரணமாய் வலிக்குது உடம்பு,
தறிக்கெட்டு ஓடுது மனது,
ஏன் எனக் கேட்டது அறிவு,
விதி என்று சொல்லுது உறவு.

இரத்தத்தில் சிவக்குது பூமி,
சித்தத்தில் கலங்குது உறுதி,
மொத்தத்தில் எழுகிறது இறுதி.

ஆள் ஒன்றுசேர்கின்றனர் தானாய்,
தாள் பற்றி உழைக்கின்றனர் மாடாய்,
மீள் எழ நினைக்கின்றனர் மேலாய்,
நாள் ஒன்று கரையுது பாழாய்.


திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
.