கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label தியானம். Show all posts
Showing posts with label தியானம். Show all posts

Tuesday, March 24, 2009

தியானம் 2


தியானம் முதல் பகுதி இங்கே.....

தியானம் 2

தியானம் என்ற முதல் பகுதியை எழுதியதில் ரொம்ப திருப்தி, ஏன்னா அதுல ரொம்ப இட் கிடைச்சது, மட்டுமல்ல விகடனிலும் பிரசுரித்து மேலும் ஊக்கப்படுத்தியிருந்தாங்க. அதோட நம்ம நண்பர்கள் எல்லாமே பின்னுட்டம் மூலம் கொடுத்த ஊக்கத்தில் தைரியத்தில் இரண்டாவது பதிவு தொடர்கிறது. முதல் பதிவில் ஒரு சில விடயங்களை தெளிவுப்படுத்தவில்லை என்று அதை அழகா பின்னுட்டத்தில் எப்படி எழுதியிருக்க வேண்டும் என கூறியிருந்த நண்பருக்கும் (அறிவே தெய்வம்) நன்றியை சொல்லிக்கொண்டு நேரா பதிவுக்குள் போவோம்.

"தியானத்தின் போது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு மூன்று தரம் குறைவாகத் துடிக்கிறது. நமது மூளை, ஒரு நல்ல தூக்க நிலையின் போது உண்டாகும் "ஆல்பா" நிலையினை அடைகிறது.மின்சக்தியை எதிர்க்கும் சுமார் ஒரு மரத்து போன தோல் உணர்வு நிலை சுமார் நான்கு மடங்கு அதிகமாகிறது. மனிதர்கள் மிக அமைதி அடைந்தவர்களாகக் காண்ப்படிகிறார்கள் என ஹார்டுவர்டு மருத்துவ பேராசிரியர் பென்சன் கூறுகிறார்.

ஆகவே தியானத்தின் உண்மை தன்மையை (நன்மையை) விஞ்ஞான மூலமும்
தெளிவுப்படுத்துகிறார்கள். அதேபோல் அமெரிக்காவின் ஹார்டு வார்ட் பல்கலைக்கழகத்திலும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பலரைத் தியானம் செய்ய கூறி அவர்களது ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ஆசனவாயின் வெப்பநிலை,தோலின் உண்ர்வு,மூளையின் மின் துடிப்பு முதலியவற்றை மருத்துவக் கருவி கொண்டு சோதித்தனர். தியானத்தின்போது நமது ஆக்சிஜன் தேவை குறைந்து அதே போல வெளிவரும் மூச்சில் கார்பனைட் ஆக்சைடின் அளவும் குறைந்தது. அதாவது மனிதன் நல்ல நினைவுடன் விழிப்பு நிலையில் இருக்கும் போது தியானம் செய்தவன் மூலம், தூக்க நிலையையும் கடந்து ஓர் உரிய ஓய்வை உடல் பூரணமாக அனுபவிக்கிறது என கண்டனறாம். நமது உடலின் உள்ளே நிகழும் உணவு மாறுபாடுகள், ரசாயன் மாற்றங்கள் எல்லாம் சுமார் 20 சதம் குறைகின்றன எனவும் அறிந்துள்ளனர். (இதற்கான ஆதாரம் தேடியும் கிடைக்க வில்லை யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.)

தியான‌த்தில் இவ்வளவு உண்மைகள் இருக்கின்ற போதிலும் யாருமே தானாய் முன் வந்து நாளுக்கு ஒரு 30 நிமிடம் சொலவு செய்ய விரும்பாமைக்கு காரணம் ஏதுவாயிருக்கும்? பொதுவாக நோக்கினோமானால் தியானத்திப்பற்றிய போதிய அறிவினை எந்த பாடசாலை புத்தகங்களிலும் வழங்காமை, தியானத்தை இந்து அல்லது பெளத்த மதம் சார்பானவை என பலரும் என்னுதல், அதோடு தியானத்தை மதம் சார்ந்த அமைப்புகள் கொண்டு நடாத்துவதையும் குறிப்பிடலாம். ஒரு நாளுக்கு 30 நிமிடம் நாம் தியானத்திற்கு சொலவிடுவதால் மீதி 23.5 மணித்தியாலம் நிம்மதியடையலாம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அதோடு பாடசாலைகளில் இதற்கு நேரம் ஒதுக்கி பயிற்சியினை அழிப்பதன் மூலம் தியானத்தின் உண்மை நிலையினை பலரும் புரிந்துக்கொள்ள வழிவகுக்கலாம்.

"ஒரு நாட்டில் ஒரு சதவீத மக்கள் தியானம் செய்வதால் அந்நாட்டில் 10 சதவீத குற்றமும், களவும், கொலையும் குறையும்" என்று ஞானிகள் கூறுவர்.

தியானத்தை பின்ப்பற்ற‌ மதம் தேவையில்லை தியானத்தின் போது ஓம், சிவாய நம, யேசு, அல்லா, புத்தம் இப்படி எதுவேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.நம்மை நாமே அறிந்து கொள்ள, நம்மில் உள்ள சக்தியை உணர்ந்துக்கொள்ள ஒரு முறை தான் தியானம்.


தியானம் தொடரும்...


அறிவே தெய்வம் என்பவரால் விபஸ்ஸனா தியான முறை பற்றி தெரிந்துக்கொண்டேன் நீங்களும்...





Friday, March 13, 2009

யூத்ஃபுல் விகடனில் எனது முந்தைய பதிவான தியானம்


http://youthful.vikatan.com/youth/bcorner.asp

யூத்ஃபுல் விகடனில் எனது முந்தைய பதிவான் "தியானம்" குட் Blogs என்ற பகுதியில் பிரசுரமாகியிருக்கின்றது. ஆனால் விடயம் லோட்டாதான் கிடைத்தது."தியானம்" என்ற கட்டுரையை பிரசுரித்தமைக்கு விகடன் மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதோடு இந்த செய்தியை அறிய தந்த நண்பரான Sriram கும் இந்த கட்டுரையை எழுத தூண்டிய நண்பர் ஆதவாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.பதிவிற்கு பின்னூட்டமிட்ட என அணைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

தியானம்
http://ckalaikumar.blogspot.com/2009/03/blog-post_11.html

Wednesday, March 11, 2009

தியானம்


அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன்.

தியானம் செய்வதற்காக பொதுவாக அமைதியான இடங்களையே தேர்ந்து எடுத்துக்கொள்வர். தியானத்தில் ஈடுபடும் போது, தான் விரும்பி வணங்கும் தெய்வத்தையோ , ஒரு பொருளையோ, அல்லது ஒரு கருத்தையோ நினைவில் நிறுத்திக்கொண்டு மன எண்ண ஓட்டங்கள் உருவாவதை தடுத்து நிறுத்துவதன் மூலம் அமைதியை அடையலாம் என்பதே தியானத்தின் நோக்கம் என எடுத்துக்கொள்ளலாம்.

மனதின் எண்ண ஓட்டத்தை துடுத்து நிறுத்துவதற்க்காக நமது ரிஷிகளும், முனிவர்களும் தியானம் செய்து வந்ததை நாம் புராணங்களில் படித்திருக்கின்றோம்.இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு அதாவது ஒரு வேளை ஆகாரமருந்தி , மற்றும் நித்திரைக்கொள்ளாமல் தியானம் செய்ததாக நாம் கேள்விப்பட்டிடுப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எந்த வகையிலும் சரிவராத காரணியாகவே அமையும். அமைதியை தேட போய் உடலின் ஆரோக்கிய தன்மையை இழக்க வேண்டி வருமே தவிர அமைதியடைய முடையாது.மெலிந்தால் முனிவருக்கழகு என்பார்கள் ஆனால் நமக்கு எவ்வளவு பொருந்தும் என தெரியவில்லை எனக்கு.

என்னை பொருத்த வரை இப்படி எம்மை வருத்திக்கொண்டு எண்ண ஓட்டத்தை நிறுத்த வேண்டுமா என்பதே எனது கேள்வி. ஒரு அழகான பாடலையோ, இசையயோ அல்லது சம்பவங்களையோ நாம் கேட்டகும் போது பார்க்கும் போது எமது எண்ண ஓட்டம் நின்று ஓர் அமைதியான நிலைக்கு நாம் உந்தப்படுவோம். அந்த சந்தர்ப்பங்களில் நாம் எதையும் நினைப்பதில்லை எதற்கும் ஆசைப்படுவதுமில்லை.மெய் மறந்து அந்த பாடலை கேட்டேன் என நம்மில் பலர் சொல்ல கேட்டு இருக்கின்றோம், அதாவது நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் முழு மனதுடன் இருப்போமானால் மனதின் எண்ண ஓட்டத்தை நிறுத்த முடியும் ஆகவே எமக்கு
தனியே சென்று அமைதியான இடத்தில் தியானம் செய்ய வேண்டியிருக்காது.

ஒருவன் தன் முழு மனதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாதப்பட்சத்திலே தான் தனிமையான இடங்களுக்கு சென்று தியானம் செய்ய வேண்டி இருக்கின்றது. ஒருவன் தன் மனதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தனது மனதில் உள்ள எண்ண ஓட்டத்தை ஆழ்ந்து கவனித்துக்கொண்டு வர‌ வேண்டும் என கூறப்படுகின்றது. அப்படி கவனித்துக்கொள்ள சுய அறிவு அவசியாமாகும். அப்படி எமது மன எண்ண ஓட்டத்தை தெரிந்துக்கொண்டால் எம்முடைய ஆற்றலை நாமே உணர்ந்து கொள்ளலாம் அதன் மூலம் எமது புத்தி நுட்பத்தை அதிகரித்து கொள்ள முடியும்.இதன் மூலம் நாம் தெளிவான நிலையை அடையும் போது எது சரி பிழை என உணர்ந்து அதன் மூலம் அமைதியடையலாம்.

தன்னை தானே அறிய முடியாதப்பட்டச்த்தில் தான் தியானம் தேவைப்படுகின்றது அல்லது வேண்டப்படுகின்றது என கூறலாம்.
தியானம் தொடரும்......

முதல் பதிவு
தியானம்
http://ckalaikumar.blogspot.com/2009/02/blog-post_19.html

பி.கு:
## ஆதவா February 20, 2009 7:47 AM
மனதிற்குள் அமைதியை இருத்தும் நிலை, தியானம்.... ஆனால் நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். உதாரணத்தீற்கு, தியானம் எப்படி செய்வது, அதன் வகைகள் (இன்னும் உண்டு) பலன்கள்... இப்படி பல எழுதியிருக்கலாம்...தியானம் செய்தவருக்குத்தான் தெரியும்... அமைதியின் முழுவடிவம்.

Sinthu February 21, 2009 8:28 PM
## அண்ணா தியானம் என்றால் என்ன? அதை தேடி பலா நாட்கள் அலைந்தவள் நான்..பலருக்கும் விளங்குவதட்காக கொஞ்சம் வரைவிலக்கணத்தைச் சொல்லுங்களேன்..

.