கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Thursday, March 26, 2009

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... (இலங்கை)

இன்று வீரகேசரி பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் உள்ள ஒரு படத்தை பார்த்த‌துமே நம்பவே முடியலங்க! ஷாக்காயிட்டேன்!

உலக நாடுகளோடு இலங்கையிலும் யுத்ததில் பாதிக்கப்பட்ட நமது சகோதரர்களுக்கு நிவாரண பொருட்களும் நிதிவுதவிகளும் சேகரித்து கொண்டிருக்கையில் மியன்மாரில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 22 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இலங்கை வழங்கிவுள்ளது, என புகைப்படத்துடன் ஒரு செய்தி. “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என நினைத்திருப்பார்களே! ம்ம்ம்


சரி சந்தோசப்பட்டுக்கொண்டு பக்கங்களை திருப்பினா இடையில் சில புகைபடங்களுடன் ஒரு செய்தி. படங்கள் கீழே. படத்தின் மேல் சொடுக்கி கொஞ்ச‌ம் வாசித்து பாருங்களேன்.!!


நன்றி வீரகேசரி
http://www.virakesari.lk/VIRA/homeslide.asp



Saturday, March 21, 2009

இலங்கையின் செங்கோல்


இதுதான் இலங்கை பாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல்.நேர்த்திமிக்க அலங்கரிப்பும் புரதான வணக்கத்தலங்களின் வடிவமைப்பையும்,அலங்காரத்தினையும் கொண்டதாக இது காணப்படுகிறது.
அத்துடன் பாராளுமன்ற ஆட்சியின் விழுமியங்களையும்,தத்துவ கோட்பாடுகளையும் குறிக்கும் நித்தியதன்மை,அழகு,பரிபூரண
சமாதானம்,நிரந்தரத் தன்மை,வளர்ச்சி, செழுமை,தூய்மை என்பவற்றின், அடையாளமாக இது திகழ்கிறது. செங்கோலானது பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அதிகாரச்சின்னமாகவும் திகழ்வதால் பாராளுமன்றம் கூடும் போது செங்கோல் வைக்கப்படுவது அவசியமாகும்.

இப்படிப்பட்ட செங்கோலை ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் அதனை தூக்கிக் கொண்டு சபையைவிட்டு ஓடினார்,ஓடிய அவர் அதனை எங்கோ ஒளித்து விட்டு பின்னர் பிற்பகலில் அது மீட்கப்பட்டது , என்பதலாம் வேறுவிடயம். சரி நாம் விசயதுக்கு வருவோம்.
செங்கோல் 1949 ம் ஆண்டு பிரித்தானியப் பொதுச்சபையினால் இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது 28 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ளதோடு 48 அங்குல நீளமுடையது. இச் செங்கோல், கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டு, வெள்ளி, 18 கரட் தங்கம், நீலமாணிக்கக்கற்கள் என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் சபாமண்டபத்திற்கு வருகை தரும் போதும், வெளியேறும் போதும், அவருக்கு முன்னே, படைக்கலச்சேவிதர் செங்கோலை ஏந்தியபடி செல்ல, அவரைத் தொடர்ந்து பாராளுமன்றச் செயலாளர் நாயகமும், பிரதிச் செயலாளர் நாயகமும் உதவிச் செயலாளர் நாயகமும் செல்வர்.

பாராளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கான மேசைக்குக் கீழே, அதற்கென அமைக்கப்பட்டுள்ள தாங்கியில் செங்கோல் காணப்படும்.
செங்கோல் மட்டுமே இருக்கும், ஆனால் செங்கோல் ஆட்சி.......???.....

Thursday, February 5, 2009

முரளிதரனை பாராட்டுவோமாக!!

கிரிக்கட்டின் முடிசூடா மன்னன் என்று ஒரு பந்து வீச்சாளரை அழைப்பதில் பிழை இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.அதுவும் ஒரு தமிழர் என்பதால் பெருமையடைகின்றேன்.முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கட் விளையாட்டு வீரனை தெரியாதவரே இருக்க முடியாது அந்தளவு தன் துறையில் பல சாதனைகளின் மன்னாக திகழ்கின்றார். இலங்கையை பொருத்தவரை தழிழ் ஊடகங்களும் சரி தமிழ் நிறுவனங்களும் சரி அவருக்கு சிங்கள ஊடகங்கள் கொடுத்த அளவு விளம்பரத்தை இவர்கள் கொடுக்கமை ஏனோ தெரியவில்லை.ஆரம்பகாலத்தில் அவர் சரியாக தன் தாய்மொழியான தழிழை சரியாக பேசுவதில்லை என்று பல பேர் விமர்சித்ததை காண கூடியதாக இருந்தது அதையும் தாண்டி பந்துவீச்சில் பிழை உள்ளது என்ற குற்றசாட்டும் சரவதேச மட்டத்தில் இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. எது எப்படியாக இருந்தாலும் காய்க்கின்ற மரத்திற்க்கு கல்லடி என்பது முரளிக்கு பொருத்தமாகவே இருந்தது. சோதனைகளை தாண்டி சாதனை படைத்த தமிழனை மன்மார்ந்து பாராட்டுவோமாக.

முரளிதரன் சிறு குறிப்பு

முழுப்பெயர் : முத்தையா முரளிதரன்
பிறப்பு ஏப்ரல் 17 1972 (வயது 36) கண்டி, இலங்கை
பாடசாலை : கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில்

முரளியின் சாதனைகளுக்கு

முர‌ளியைப்ப‌ற்றி


















Sunday, February 1, 2009

கெளதம புத்தரின் கேள்வி பதில்கள்

கெளதம புத்தர் ஜேத வனத்தில் தங்கியிருந்தபோது அவரிடம் கேட்ட சில கேள்விகளும் அவரின் பதில்களும்.

மிகவும் கூர்மையான வாள் எது?
கோபத்தில் கூறப்படும் வார்த்தை

மிகவும் கொடிய நஞ்சு எது?
எல்லாம் எனக்கு வேண்டும் என்கின்ற எண்ணம்

மிகவும் பெரிய தீ எது?
ஆசை

மிகவும் இருள் நிறைந்த இரவு எது?
அறியாமை

மிகப் பெரிய பலனை அடைபவன் யார்?
பிறருக்கு தருபவன்

அனைத்தையும் இழப்பவன் யார்?
பிறரிடம் பெறும், அதனை ஈடு செய்யும் வகையில் மற்றவர்களுக்கு கொடுக்காதவன்.

தோல்வி அடையாத ஆயுதம் எது?
பொறுமை

மிகச் சிறந்த ஆயுதம் எது?
ஆறிவு

மிகப்பயங்கரமான திருடன் யார்?
தீயசிந்தனை

மிக மேலான் செல்வம் எது?
தர்மம்

மிகவும் பாதுகாப்பான் புதையல் எது?
மரணமிலாப் பெருநிலை

வசிகரமானது எது?
நன்மை.







Friday, November 7, 2008

இலங்கையின் செங்கோல்


இதுதான் இலங்கை பாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல்.நேர்த்திமிக்க அலங்கரிப்பும் புரதான வணக்கத்தலங்களின் வடிவமைப்பையும்,அலங்காரத்தினையும் கொண்டதாக இது காணப்படுகிறது.
அத்துடன் பாராளுமன்ற ஆட்சியின் விழுமியங்களையும்,தத்துவ கோட்பாடுகளையும் குறிக்கும் நித்தியதன்மை,அழகு,பரிபூரண
சமாதானம்,நிரந்தரத் தன்மை,வளர்ச்சி, செழுமை,தூய்மை என்பவற்றின், அடையாளமாக இது திகழ்கிறது. செங்கோலானது பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அதிகாரச்சின்னமாகவும் திகழ்வதால் பாராளுமன்றம் கூடும் போது செங்கோல் வைக்கப்படுவது அவசியமாகும்.

இப்படிப்பட்ட செங்கோலை ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் அதனை தூக்கிக் கொண்டு சபையைவிட்டு ஓடினார்,ஓடிய அவர் அதனை எங்கோ ஒளித்து விட்டு பின்னர் பிற்பகலில் அது மீட்கப்பட்டது , என்பதலாம் வேறுவிடயம். சரி நாம் விசயதுக்கு வருவோம்.
செங்கோல் 1949 ம் ஆண்டு பிரித்தானியப் பொதுச்சபையினால் இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது 28 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ளதோடு 48 அங்குல நீளமுடையது. இச் செங்கோல், கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டு, வெள்ளி, 18 கரட் தங்கம், நீலமாணிக்கக்கற்கள் என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் சபாமண்டபத்திற்கு வருகை தரும் போதும், வெளியேறும் போதும், அவருக்கு முன்னே, படைக்கலச்சேவிதர் செங்கோலை ஏந்தியபடி செல்ல, அவரைத் தொடர்ந்து பாராளுமன்றச் செயலாளர் நாயகமும், பிரதிச் செயலாளர் நாயகமும் உதவிச் செயலாளர் நாயகமும் செல்வர்.

பாராளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கான மேசைக்குக் கீழே, அதற்கென அமைக்கப்பட்டுள்ள தாங்கியில் செங்கோல் காணப்படும்.
செங்கோல் மட்டுமே இருக்கும், ஆனால் செங்கோல் ஆட்சி.......???.....

.