கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Sunday, December 7, 2008

தமிழ்

தமிழோடு நாம் கொண்ட மேகம்
எந்த ஜென்மதிலும் தீராத தாகம்
தீ வந்து உடல் சுட்ட போதும்
வேகாது வேகாது தமிழ் தேகம்

தமிழே எம் உயிரின் பாகம்
தமிழின்றி கண்டதில்லை ஒரு வேதம்
தமிழால் வாழ்வது ஒரு யோகம்
தமிழுக்காய் வாழ்வதே யாகம்

தமிழுக்கே இழுக்கென்றால் உள்ளம் நோகும்
தமிழுக்கெனின் என் உயிர் போகும்
சங்கம் வளர்த்தத் தமிழ் உலகை ஆளும்
அங்கமெல்லாம் தமிழ் என்றே ஓதும்

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

3 comments:

geevanathy said...

நல்ல கவிதை பாராட்டுக்கள்...

முடியுமென்றால் Word Verification எடுத்துவிடுங்கள் அது மறுமொழியிடுவதை இலகுவாக்கும்

kuma36 said...

நன்றி ஜீவா அவர்களே. Word Verification எடுத்துவிட்டேன்

Sinthu said...

தமிழ் மீதான பற்று அதிகமாகிக் கொண்டே போகிறது அண்ணா........

.