கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Monday, January 12, 2009

இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்.


சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள் சில

"மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை."

"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."


"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."

"கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்"

"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."

"உங்கள் நாடு வீரர்களை வேண்டி நிற்கின்றது. வீரர்களாகுக; ஒரு பாறையைப் போல் உறுதியாக நிற்பீர்களாக. உண்மையே எப்பொழுதும் வெல்கின்றது. இந்தியா வேண்டுவது,நாட்டினரின் இரத்தக் குழாய்களிலே ஒரு புது வலிமையை ஊட்டும் புதியதொரு மின்சாரத்தீயையே, துணியுங்கள்!"

1 comment:

இறக்குவானை நிர்ஷன் said...

என்னுடைய ஆத்மார்த்த குரு சுவாமி விவேகானந்தர்.
நினைவோடு பதிவிட்டமைக்கு நன்றிகள் கலை.
என்னுடைய மேடை வலையிலும் பதிவிட்டுள்ளேன்.

.