கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Saturday, November 29, 2008

தேயிலைச் செடி

என் தாத்தா சொன்னார்,
இது தான் நாங்கள்
காடுகள் வெட்டி, கழனியாக்கி
தேயிலைச்செடிகள் நட்ட இடம்.

என் அப்பா சொன்னார்,
இது தான் நாங்கள்
தேயிலை பறித்து
தேகம் நொந்த இடம்.

நான் சொன்னேன்,
இதுதான்
தேயிலைச் செடிகள்
இருந்த இடம்.

என் மகன் சொன்னான்,
இது தான்
தேயிலை என்ற செடிகள்
இருந்த இடம்.

என் பேரன் சொன்னான்,
இங்கு தான்
தேயிலை என்றொரு
செடி இருந்ததாம்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html


No comments:

.