கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Thursday, December 11, 2008

இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

வானகமே! இளவெயிலே! மரச்சரிவே
வானகமே இளவெயிலே மரச்சரிவே
நீங்கள் எல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ

போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்(து)தழிந்தே போனதனால்
நானும் ஒர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ

நிற்பதுவே...

காலமென்றே ஒரு நினைவும்
காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்கு குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஒர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ

நிற்பதுவே...

பாரதியைப் பற்றி மேலதிக தகவல்கள்: http://www.tamilnation.org/literature/bharathy/index.htm

2 comments:

சிவத்தமிழோன் said...

பாரதியின் நினைவு நாளுக்கு பதிவிட்டு புரட்சியின் தமிழுக்கு அழகு சேர்த்த அருமை நண்பரே, தங்களின் வலைப்பூவை கண்டு மனம் மகிழ்ந்தேன். தமிழை அள்ளிக்குடித்தேன். வளமான வலைப்பூ. மக்களை விழிப்பூண்டும் நெஞ்சங்கள் எல்லாமே என் நெஞ்சத்துடன் உறவாடும் உறவுகள். சமூக விழிப்புணர்வு என்பது பல தளங்களில் பல கோணங்களில் பல வர்ணங்களில் வரையப்படவேண்டியுள்ளது. பகுத்தறிவுச் சமயரீதியில் எழுதுகிறேன் எளியேன். பொதுவான சமூக சிக்கல்களை விழிப்புணர்வுக்கு கொண்டுவருகின்றது தங்களின் அருமையான் இவ்வலைப்பூ. எழுதுக நண்பரே. ஓயாமல் எழுதுக. வாழ்த்துகள்.

kuma36 said...

மிக்க நன்றி. உங்களுடைய வாழ்த்துக்கள் எம்மை ஊக்கப்படுத்துகிறன‌

.