
இதுவரை
மாறியாய் இருந்த நீ
திடிரென மாறிபோனாய்
கூட்டல், பெருக்கல்
என்பவற்றில் தானே
நீ குறியாக இருந்தாய்
இப்போது..
க்ழித்தலில் கவனம்
செலுத்த.. காரணமென்ன?
அடைப்புக்குறிக்குள்
வைத்துத்தான்..
நான் உன்னை
அடையாளம் கண்டேன்
நீ - மாறி விட்டாய் என்று
வினாக்குறி என்பது
விளையாட்டுக்காக
மட்டுமேதானே!
நீ - இட்டிருக்கும்
விளங்காக் குறிக்கு
விஞ்ஞான விளக்கமென்ன?
சந்திக்கு வந்தேன்
உன்னை சந்தித்து போக
நீ - ஏன்
சமாந்திரமாய்
விலகிப்போனாய்
உன் மாற்றங்களால்
நானும்...
மாறியாகி விட்டேன்
இனிமேல் நாமிருவருமே!
"மாறிகள்" தான்
நன்றி
நாச்சியாதீவு பர்வீன்
நூல் : சிரட்டையும் மண்ணும்.
1 comment:
மாறிலியாக இருந்துவிட்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது........
மாறியை விட சார்ந்த மாறி நல்லது......... சமாளித்துக் கொள்ளலாம்..........
Post a Comment