கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Monday, December 22, 2008

நவின தீவிரவாதி

உனக்கு சுடத்தெரியாது
இருந்த போதும்
உன் வீட்டு மூலை
முடுக்குகளிலும்
வேலியோரங்களிலும்
குப்பை மேடுகளிலும்
துப்பாக்கிகளும் ரவைகளும்
கண்டெடுக்கப்படும்

கைக்குண்டுகளை
நீ கண்டதும் கிடையாது

ஆனபோதும்
உன்பொதிகளுக்குள்
ஏகப்பட்ட குண்டுகள்
இருந்ததற்காய் நீ கைதவாய்

கத்திகளும் அரிவாளும்
நீ காடுகளை
வெட்டுவதற்குதான்
பயன்படுத்திருப்பாய்

ஆனால் கைகளும், கால்களும்
வெட்டப்பட்டதற்கான‌
அடையாளங்கள்
உன் வீட்டுக்கத்திகளில்
அடிக்கடி உன்னை
கைது செய்வார்கள்

எங்கெங்கோ வெடிக்கின்ற‌
குண்டுகளுக்கு,
அடையாள அணிவகுப்பிற்காய்
அழைத்திருப்பர் உன்னையும்
அரச மரியாதையுடன்,

திட்டுவதற்கே
யோசிகின்ற உன் பெயர்தான்
தீவிரவாதிகளின் பட்டியலில்
முதலில் இருக்கும்

நன்றி
நாச்சியாதீவு பர்வீன்
நூல் : சிரட்டையும் மண்ணும்.


2 comments:

சாந்தி நேசக்கரம் said...

யதார்த்தம் சொல்லும் அருமையான கவிதை.

சாந்தி

Sinthu said...

நியமாக நடப்பவற்றைத் தான் சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா.
கவலையான் விடயம் தான் ஆனால் அருமையான கவிதை வரிகள்.

.