கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, August 12, 2009

நண்பர்களுக்குகோர் அழைப்பிதழ்

இலங்கைப் பதிவர் சந்திப்பு


காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.


நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.


லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.


பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.

யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

18 comments:

ஆ.ஞானசேகரன் said...

சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் நண்பா

kuma36 said...

நன்றிகள் நண்பரே!

ARV Loshan said...

சந்திப்போம்.. சிந்திப்போம்..

சப்ராஸ் அபூ பக்கர் said...

சந்திப்பு வெற்றி கரமாக அமைய வாழ்த்துக்கள் நண்பா....

சி தயாளன் said...

சந்திப்பு இனிதே நடக்கட்டும். நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் பதிவர்கள் கூடுவது இன்னும் சிறப்பு...:-)

தர்ஷன் said...

அட இத்தனை நாளா எங்க போயிரீந்தீங்க
anyway பதிவர் சந்திப்பு சிறப்புற நடக்க வாழ்த்துக்கள் என் போன்ற பதிவர்களுக்கு ஏனைய பதிவர்களுடன் பரஸ்பரம் அறிமுகத்தை ஏற்படுத்த இது உதவியாய் இருக்குமெனினும் வேலைப்பளுவின் காரணமாக வர முடியாதென்றே கருதுகிறேன்.
இருக்கட்டும் இது ஆரம்பம் தானே
லோஷன் அண்ணா உள்ளிட்ட ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

Unknown said...

KEEP ON GOING MY FRIEND
MADHAN.W

புல்லட் said...

இடுகைக்கு நன்றி.. தங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளோம்..

Admin said...

//LOSHAN said...
சந்திப்போம்.. சிந்திப்போம்..//


அதேதான்.

Unknown said...

சந்திப்பு நன்முறையில் நடக்க என் வாழ்த்துக்கள்....!!

kuma36 said...

// LOSHAN said...
சந்திப்போம்.. சிந்திப்போம்.///

சந்திப்போம் சந்திப்போம் அண்ணா

// சப்ராஸ் அபூ பக்கர் said...
சந்திப்பு வெற்றி கரமாக அமைய வாழ்த்துக்கள் நண்பா...///

ஏன் நீங்க வரவில்லையா?


///’டொன்’ லீ said...
சந்திப்பு இனிதே நடக்கட்டும். நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் பதிவர்கள் கூடுவது இன்னும் சிறப்பு...:////

சிறப்பு பெற வேண்டும் ம்ம்ம்ம்ம்

kuma36 said...

/// தர்ஷன் said...
அட இத்தனை நாளா எங்க போயிரீந்தீங்க
anyway பதிவர் சந்திப்பு சிறப்புற நடக்க வாழ்த்துக்கள் என் போன்ற பதிவர்களுக்கு ஏனைய பதிவர்களுடன் பரஸ்பரம் அறிமுகத்தை ஏற்படுத்த இது உதவியாய் இருக்குமெனினும் வேலைப்பளுவின் காரணமாக வர முடியாதென்றே கருதுகிறேன்.
இருக்கட்டும் இது ஆரம்பம் தானே
லோஷன் அண்ணா உள்ளிட்ட ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்///

முடியுமென்றால் கலந்துக்கொள்ளுங்களேன் தர்ஷன்!!!

///madhaan said...
KEEP ON GOING MY FRIEND
MADHAN.W///

Yahaa sure madhaan!! try to attend plz


///புல்லட் said...
இடுகைக்கு நன்றி.. தங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளோம்///

நானும் தான்


////சந்ரு said...
//LOSHAN said...
சந்திப்போம்.. சிந்திப்போம்..//

சந்திப்போம்


/// லவ்டேல் மேடி said...
சந்திப்பு நன்முறையில் நடக்க என் வாழ்த்துக்கள்....!!////

நன்றிகள் நண்பரே!!!

Sarves said...

வணக்கம் கலை!

நீண்ட நாட்களுக்குப் பின்...
23ம் திகதி சந்திப்போம், நல்ல முயற்சி.

சர்வேஸ்

வந்தியத்தேவன் said...

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

அகநாழிகை said...

கலை இராகலை,
சந்திப்பு சிறக்க நல்வாழ்த்துக்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

kuma36 said...

/////Sarves said...
வணக்கம் கலை!
நீண்ட நாட்களுக்குப் பின்...
23ம் திகதி சந்திப்போம், நல்ல முயற்சி.
சர்வேஸ்/////

வணக்கம் சர்வேஸ்!! விரைவில் சந்திப்போம்

/////வந்தியத்தேவன் said...
உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.////

சந்திக்க ஆவல்லாய் உள்ளேன் வந்தி!!


/////அகநாழிகை said...
கலை இராகலை,
சந்திப்பு சிறக்க நல்வாழ்த்துக்கள்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்////

நன்றிகள் நண்பரே

தேவன் மாயம் said...

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் நண்பரே!!

Anonymous said...

சந்திப்பு வெற்றிகரமாய் அமைந்திட வாழ்த்துக்கள்!

.