கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Monday, November 10, 2008

என்ன மனிதர் இவர்

என்ன நீதி இது?
கள்வர்களை விட்டு விட்டு
காவலர்களை கைது செய்கிறார்கள்.

என்ன பெண்மை இது?
பூக்களை விட்டு விட்டு
முட்களைப் பறிக்கிறார்கள்.

என்ன காதலர் இவர்கள்?
காதலியை(லனை) விட்டு விட்டு
காதலை மட்டும் நேசிக்கின்றார்கள்.

என்ன தேனீக்கள் இவைகள்?
பூக்களை விட்டு விட்டு
சாக்கடைகளைச் சுற்றுகின்றது.

என்ன மனிதர் இவர்கள்?
நீதியை விட்டு விட்டு
அநீதியையே ஆதரிக்கின்றனர்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.

No comments:

.